"யாரைக் கேட்டுடா கொண்டு போனீங்க? யாரைக் கேட்டு கொண்டு போனீங்க...?"
தாம் வருவதற்குள் தந்தையின் காரியத்தை முடித்து விட்ட அண்ணன்மார்களிடம் கடைசி தம்பி வடிவேலு எகிறும் எம்டன் மகன் பட வசனம் அது.
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் மாற்றப்படுவதாக செய்தி வெளியானதில் இருந்து , அதற்கு எதிராக வரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது #வியன் நினைவுக்கு வந்து போவது அந்த வசனமே!

" யாரைக் கேட்டுடா மாத்துறீங்க? யாரைக் கேட்டு மாத்துறீங்க?"
என கேட்பது போல் உள்ளது.
14-ஆவது நாடாளுமன்றம் அமைந்து 2 ஆண்டுகள் 2 மாதங்கள் தான் ஆகியிருக்கின்றன. முழுத் தவணை முடிய இரண்டரை ஆண்டுகள் இருக்கும் போது, பாதியிலேயே மாற்றுவது ஏன்? ஏன்? என விஷயம் அறிந்தவர்கள் கேட்கிறார்கள்.
ஆட்சி மாறும் போதெல்லாம் அது வழக்கம் தானே என வியனும் முடிந்தவரை 'சமாதானம்' கூறி வருகிறேன்.
இந்த நிலையில் தான் தூய்மையான - நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் அமைப்பான BERSIH 2.0 இன்று பெட்டிஷனே போட்டு விட்டது.
நாடாளுமன்ற சீர்த்திருத்த நடவடிக்கைகளைத் தொடரவும் வலுப்படுத்தவும் நடப்பு சபாநாயகர் Tan Sri Mohamad Arif Md Yusof பதவியில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என அந்த தேர்தல் சீர்திருத்தக் குழு கோரியுள்ளது.
" மலேசிய குடிமக்களாகிய நாங்கள், இதனால் சொல்ல வருவது என்னவென்றால், ஜூலை 13-ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது சபாநாயகரை மாற்ற பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தாக்கல் செய்யவுள்ள தீர்மானத்தை, நாங்கள் நிராகரிக்கிறோம்.
"அதெப்படி, பதவியில் இருந்து நீக்குவதென்றால் சபாநாயகர், 2 துணை சபாநாயகர்களை என மூவரையும் அல்லவா நீக்க வேண்டும்? அதை விடுத்து, சபாநாயகரையும் , DAP-யைச் சேர்ந்த துணை சபாநாயகர் Nga Kor Ming-ங்கையும் மட்டும் மாற்ற தீர்மானம் கொண்டு வருவது ஏன்? முகிதின் முகாமில் இருப்பதால் இன்னொரு துணை சபாநாயகர் Rashid Hasnon-னை மட்டும் விட்டு வீட்டீர்கள்?" என BERSIH கேட்கிறது.
வழக்கமாக நாடாளுமன்றம் கலைக்கப்படும் போதோ, மரணம் சம்பவிக்கும் போதோ, பதவி விலகல் நடைபெறும் போதோ தான் சபாநாயகர் நாற்காலி மாறும். இப்படி பாதி தவணையில் மாறுவதென்பது எல்லாம் மலேசிய வரலாற்றில் நடக்காத ஒன்று. என்ன விளையாடுறீங்களா? என்று கேட்காமல் கேட்கிறது BERSIH.
Harun கொண்டு வந்த #Undi18 எனப்படும் 18 வயதிலேயே வாக்களிக்கத் தகுதிப் பெறுவது, Automatic Voter Registration எனும் இயல்பாகவே வாக்காளர்களாகவே பதிவுச் செய்யப்படுவது போன்ற திட்டங்கள் செயலாக்கம் காணுமா அல்லது கிடப்பில் போடப்படுமா என தெரியவில்லை. (SPR-ருக்கு புதிதாக வருபவர் மனது வைக்க வேண்டுமே?)

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் மாற்றப்படுவதாக செய்தி வெளியானதில் இருந்து , அதற்கு எதிராக வரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது #வியன் நினைவுக்கு வந்து போவது அந்த வசனமே!
" யாரைக் கேட்டுடா மாத்துறீங்க? யாரைக் கேட்டு மாத்துறீங்க?"
என கேட்பது போல் உள்ளது.
14-ஆவது நாடாளுமன்றம் அமைந்து 2 ஆண்டுகள் 2 மாதங்கள் தான் ஆகியிருக்கின்றன. முழுத் தவணை முடிய இரண்டரை ஆண்டுகள் இருக்கும் போது, பாதியிலேயே மாற்றுவது ஏன்? ஏன்? என விஷயம் அறிந்தவர்கள் கேட்கிறார்கள்.
இந்த நிலையில் தான் தூய்மையான - நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் அமைப்பான BERSIH 2.0 இன்று பெட்டிஷனே போட்டு விட்டது.
நாடாளுமன்ற சீர்த்திருத்த நடவடிக்கைகளைத் தொடரவும் வலுப்படுத்தவும் நடப்பு சபாநாயகர் Tan Sri Mohamad Arif Md Yusof பதவியில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என அந்த தேர்தல் சீர்திருத்தக் குழு கோரியுள்ளது.
" மலேசிய குடிமக்களாகிய நாங்கள், இதனால் சொல்ல வருவது என்னவென்றால், ஜூலை 13-ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது சபாநாயகரை மாற்ற பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தாக்கல் செய்யவுள்ள தீர்மானத்தை, நாங்கள் நிராகரிக்கிறோம்.
"அதெப்படி, பதவியில் இருந்து நீக்குவதென்றால் சபாநாயகர், 2 துணை சபாநாயகர்களை என மூவரையும் அல்லவா நீக்க வேண்டும்? அதை விடுத்து, சபாநாயகரையும் , DAP-யைச் சேர்ந்த துணை சபாநாயகர் Nga Kor Ming-ங்கையும் மட்டும் மாற்ற தீர்மானம் கொண்டு வருவது ஏன்? முகிதின் முகாமில் இருப்பதால் இன்னொரு துணை சபாநாயகர் Rashid Hasnon-னை மட்டும் விட்டு வீட்டீர்கள்?" என BERSIH கேட்கிறது.
![]() |
இடமிருந்து வலம்: Nga Kor Ming | Tan Sri Mohamad Arif Md Yusof | Rashid Hasnon |
எனவ ஜூலை 13-ல் அத்தீர்மானம் வரும் போது அதை எதிர்த்து வாக்களிக்க அனைத்து MP-களும் முன் வர வேண்டும்.
Moh Arif மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் தொடர அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
![]() |
Datuk Azhar Harun |
புதிய சபாநாயகராக, தேர்தல் ஆணையத் தலைவராக உள்ள Datuk Azhar Harun கொண்டு வரப்படுவதாக தகவல்.
தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகக் கூறி தான் அந்த மனிதரை முந்தைய Pakatan அரசு கொண்டு வந்தது. இப்போது அதுவும் பாதியிலேயே 'பிச்சிக்கிச்சே!' நிலை தான்.

Harun -னை விட மேலும் இருவர் போட்டியில் இருப்பதாகவும் செய்தி.
ஒருவர் முன்னாள் 'சட்டாம்பிள்ளை' அதாங்க பழைய ஆள் Tan Sri Pandikar Main Mulia. இன்னொருவர் முன்னாள் நீதிபதியாம். ஆனால் Azhar Harun தான் லீடிங்கில் இருப்பதாகவும், ஜூலை 13-ல் பெரும்பான்மை வாக்குகளில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவது உறூதி என்பதும் தெரிகிறது.
ஒருவேளை Azhar Harun சபாநாயகராக வெற்றிப் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். முகிதின் அரசு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதை அது ஊர்ஜிதப்படுத்தி விடும். அதன் பிறகு நம்பிக்கைத் தீர்மானமாவது, நம்பிக்கையில்லாத் தீர்மானமாவது? எல்லாரும் வெறும் சம்பிரதாய நடவடிக்கையாக மட்டுமே ஆகி விடும்.
ஆக, ஜூலை 13-ல் தரமான செய்கை காத்திருக்கிறது!
...வியன் அப்படித் தான் முடிப்பார் என்று நினைத்தால் அது தவறு!
நாமெல்லாம் எதிர்பார்ப்பது போன்று பெரிதாக எதுவும் நடக்கப் போவதில்லை. அமைதியாய் போய்க் கொண்டிருக்கும் ஒருவர் முகத்தில் தான் புன்னகைத் தவழப் போகிறது.
பொறுத்திருங்கள்!
No comments:
Post a Comment